Also Watch
Read this
By: Web Team

சென்னை பள்ளிக்கரணையில், கார் மோதி மடிப்பாக்கம் போக்குவரத்து முதன்மை காவலர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மடிப்பாக்கத்தில் காவலர் மேகநாதன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கார் ஒன்று நிற்காமல் செல்ல, அவர் காரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் மீது மோதிய கார் சுமார் 20 மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மடிப்பாக்கத்தை சேர்ந்த சாய்ராம், மதுபோதையில் காரை ஓட்டியதில் காவலர் உயிரிழந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved