Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை மாநராட்சி,மதுரவாயல் 144 வது வார்டு மேட்டுகுப்பம் பிரதான சாலை சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த பழக்கடை காய்கறி கடை ,பூக்கடை ,திண்பன்ட கடை என 20 மேற்ப்பட்ட கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை வைத்து லாரிகள் மூலம அகற்றினர்.
அப்போது அங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வியபாரிகள் என 100 க்கும் மேற்ப்பட்டோர் வந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,காவல்
துறையினரிடம் முன் அறிவிப்பு இன்றி அகற்றி வாழ்வாதரத்தை கெடுப்பதாக கூறி வாக்கு வாதம் செய்த நிலையில் பொருட்களை திருப்பி அளித்தனர்.
முன்னதாக பெண் வியபாரி ஒருவர் பொருட்களை அள்ளி செல்ல வந்த மாநகராட்சி லாரியின் சக்கரத்தில் முன்பு படுத்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வழி மறித்ததால் பெரும் பரபரப்பானது பின்னர் அந்த பெண்னை மதுரவாயல் போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதையும் படியுங்கள் : சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved