Also Watch
Read this
By: Manigandan Raja

முக்கியத்துவம் வாய்ந்த அறையில் மின்சாரம் துண்டிப்பு :
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக தமிழகம் எங்கும் தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கக் கூடிய வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வாக்கு இயந்திரங்களானது அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கும் பணி ஆனது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உதகை பிரிக்ஸ் பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் சீல்களை அகற்றி அரங்கத்திற்குள் சென்றனர்.
ஆனால் அரங்கத்தில் மின் சப்ளை இல்லாமல் இருண்டு கிடந்தது. இதனை அடுத்து அங்கிருந்து அதிகாரிகள் உடனடியாக மின் சப்ளை வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தனர் ஆனால் நெடுநேரம் ஆகியும் மின் சப்ளை வராததால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இருளிலேயே காத்துக் கிடந்தார்.
மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஸ்டாங் ரூம் இல் மின்சார சப்ளை இல்லாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.