வார விடுமுறையை கொண்டாட தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, சுற்றுலா பயணிகள் அவர்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். அதே போல் பறவைகள் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், முதலை பண்ணை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.