விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வைத்தியநாதசாமி கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ரதவீதிகளில் வைத்தியநாதசாமி, பிரியாவிடை மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளிய தேர்களை பக்தி கோஷம் முழங்க ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி முன்னதாக உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.