தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடக் கோரியிருந்தார்.