Also Watch
Read this
Posted on: May 20, 2025 06:40 AM
By: Srini Vasan

இலங்கை தமிழர் வழக்கில் இந்தியா சத்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மனிதநேயத்தின் மாண்பை உடைப்பது போல இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மோதல் சம்பவத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், சாதிய ஆணவத்தோடு செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை திலகர் திடலில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகாடு வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved