தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள பொது ஆவுடையார் திருக்கோயிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை பொங்கலன்று மட்டுமே திறந்திருக்கும் இந்த கோவிலில் பக்தர்கள் நெல், நவதானியம், ஆடு, கோழி, இளநீர் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி நேர்த்தி கடன் செலுத்துக்கின்றனர்.