Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 09:53 AM
By: Manigandan Raja

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமிட்டு வந்து ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற வடமாநில மூதாட்டியை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானை சேர்ந்த ஸ்ரீ பால்சிங் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்த சாமியார் வேடமிட்ட மூதாட்டி, தாமும் ராஜஸ்தானில் இருந்து வருவதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
பின்னர் டீ கேட்டவர், சாமி படத்தில் இருந்த பூவை வாங்கி குங்குமமாக மாற்றி கடை உரிமையாளர் பால்சிங்கிற்கும், கடை ஊழியர்களுக்கும் திலகமிட்டதாக கூறப்படுகிறது. மூதாட்டியின் சித்து வேலையால் கடை ஊழியர்களே கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்ததோடு, பைக்கில் ஏற்றிச் சென்று பேருந்து நிலையத்திலும் விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved