திருவண்ணாமலையில் மண் சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு கட்டப்பட்டு வரும் தற்காலிக குடியிருப்புகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, அங்குள்ள மக்கள் மாற்று இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று இடம் தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.