Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 11:47 AM
By: Web Team

காலி பாட்டில்களை வாங்கி வைப்பதற்கு போதிய இட வசதியில்லை, ஊழியர்கள் பற்றாக்குறை என குற்றம்சாட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை மதுபான கடையில் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் தரப்படும் என்ற நடைமுறை விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திண்டிவனத்தில் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved