Also Watch
Read this
By: Fyrose Banu

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்து குளிர்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
கன்னியாகுமரியில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சி - மக்கள் மகிழ்ச்சி
குறிப்பாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான பேச்சிப்பாறை, திற்பரப்பு, குலசேகரம், ஆற்றூர், திரு லட்டார், அருமனை, குழித்துறை, மார்த்தாண்டம் உட்பட பல பகுதிகளில் சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் சற்று குறைந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved