Also Watch
Read this
By: Web Team

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று,
சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களை கைது செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved