கும்பாபிஷேக விழா வெகு விமரிசை : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் கோபுர கலசத்திற்கு ட்ரோன் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். Related Link பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்காமல் அலட்சியம்