நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் பயோமெட்ரிக் சர்வர் சரிவர வேலை செய்யாததை அறிந்த பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கைரேகை பதிவு செய்யாமலேயே தேர்வு எழுதிய நிலையில், தங்களது குழந்தைகளின் விடைத்தாள் திருத்தப்படுமோ, திருத்தப்படாதோ என்கிற அச்சத்தில், பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.