Also Watch
Read this
By: Manigandan Raja

ஏழரை பவுன் நகை பறிப்பு :
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடமே ஏழரை பவுன் தங்க நகையை பறித்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களக்காடு பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய *தனஸ்* என்ற பெண்ணிடம், அவரது பக்கத்து வீட்டுக்காரரான 42 வயதுடைய *பொன்செல்வி* என்பவர் இந்த நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பொன்செல்வி தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்து தனஸிடம் இருந்த ஏழரை பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பொன்செல்வி முகத்தில் கட்டியிருந்த துணி விலகியுள்ளது. இதனால் தனஸ் அவரை அடையாளம் கண்டு கொண்டார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பொன்செல்வியை கைது செய்துள்ளனர்.
பறிக்கப்பட்ட நகையை பொன்செல்வி எங்கு மறைத்து வைத்துள்ளார் அல்லது எங்கு வீசினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் தள்ளுமுள்ளு மட்டுமே என்றும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பொன்செல்வியிடம் இருந்து நகையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved