இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்தார் கோட்டை பகுதியில் வசித்து வரும் ஹபீப் ரஹ்மான் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த கடல் அட்டைகள் சிக்கின.