திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 15 நாட்களில் மட்டும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை, கோவில் இணை ஆணையர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் கோடிக்கணக்கில் பணம் மட்டுமின்றி, 1 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.