Also Watch
Read this
By: Manigandan Raja

வாக்களிக்கச் செல்லும் வழி அடைப்பு :
சேலம் அருகே வாக்களிக்க செல்லும் வழியை அடைத்த நபர் பொதுமக்கள் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கி பட்டி பகுதியில் அரசினர் துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் வாக்களிக்க செல்லக்கூடிய பாதையை தனி நபர் ஒருவர் வேலி அமைத்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என கூறி ஐம்பதுக்கு மேற்பட்டோர் சேலம்
கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved