கடலூர் அருகே குடும்பத்துடன் பெரியப்பட்டு கடற்கரைக்கு சென்ற பெண்ணை, மதுபோதையில் கேலி கிண்டல் செய்து, அதனை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தியாகவல்லி பகுதியை சேர்ந்த தினேஷ், சரவணன், மாணிக்கவேல் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.