Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமாரி மாவட்டத்தில், தொடர் மழையால், வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை அக்.16-18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று மதியம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய கடையாலு மூடு, அருமனை, களியல் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்பட பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வெப்பம் குறைந்துள்ளதால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved