திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த நபரை டிஎஸ்பி மகேஷ் குமார் காரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.சாலை விபத்தில் காயமடைந்த நபர்திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த சேவியர்(55). இவர் திருச்செந்தூர் நோக்கி அடைக்கலாபுரம் அருகே பைக்கில் சென்ற போது திடீரென சாலையின் வலது புறம் ஏறிச் சென்றதால் பின்னால் வந்த பைக் மோதியதில் சாலையில் விழுந்த சேவியருக்கு தலையில் பலத்த காயமடைந்து இரத்தம் வெளியேறியது. D.S.P.மகேஷ் செய்த மனிதநேய சம்பவம்அப்போது அங்கு காரில் வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி உடனே படுகாயம் அடைந்த சேவியரை தனது காரில் ஏற்றி விரைவாக சென்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றிய திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். Related Link கல்லூரி மாணவர்களை மிரட்டிய காவல் ஆய்வாளர்