Also Watch
Read this
By: Web Team

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது. டிட்வா புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவியதால் பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்ததையடுத்து, வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved