திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக் கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்ற அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்பகுதியில் காலம் காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியடைந்து வருவதாக வேதனைத் தெரிவித்த கிராம மக்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.