Also Watch
Read this
Posted on: Nov 12, 2025 01:31 PM
By: Web Team

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் தங்களது எதிர்ப்பையும் மீறி புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதாக கண்டித்து, கிராம மக்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்தனர்.
கல்லணை, அச்சங்குளம், டி.புதூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்களில் ஏற்கனவே உள்ள குவாரிகளால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களிடம் கருத்து கேட்பு நடத்தாமலேயே புதிதாக 3 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்த கிராம மக்கள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டையையும் திருப்பி அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved