திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.