சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரணசிங்கபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு, ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.