கன்னியாகுமரி ஆழ் கடலில் இயற்கை எரிவாயு திட்டம், காற்றாலை திட்டம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரோக்கியபுரம் கடற்கரையில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர் உட்பட மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.