Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சேரும் குப்பை கழிவுகளை சேகரிக்க நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டு அதன் மூலம் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்தது.
பேட்டரி வாகனங்கள் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக குப்பைகள் சரி வர அள்ளப்படாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தூய்மை பணியாளர்கள் வாகனம் இல்லாமல் குப்பைகளை மூட்டைகளில் கட்டி ஒவ்வொரு பகுதியாக இழுத்து சென்று குவித்து வைப்பதால் உடல் பாதிப்பும் குப்பைகளை அகற்ற காலதாமதம் ஏற்படுவதாக கூறும் ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள்.
குப்பை கழிவுகளை அகற்ற சீர்காழி நகராட்சி நிர்வாகம் பழுதான பேட்டரி வாகனங்களை சரி செய்து தரவும் மேலும் புதிய பேட்டரி வாகனங்களை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved