திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீடுகளை சூறையாடிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரகாசபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள், வீடுகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதனைக் கண்டித்து நடைபெற்ற திடீர் சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.