திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் கட்டடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். திருத்தணி ம.பொ.சி சாலையில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டின் பழைய கட்டடம் அகற்றப்பட்டு கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.