Also Watch
Read this
By: Fyrose Banu

ராணிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியான விஸ்வாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் H.நூர்ஜகான் என்பவரின் 2 வது மகனான மாற்றுத்திறனாளி மாணவரான ஜாஃபர் பயின்று வருகிறார். சுமார் 28 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று ஜாஃபரின் 30-வது பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக விஸ்வாஸ் பள்ளியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பிறந்த நாள் விழவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அமைச்சர் ஆர். காந்தி ஜாஃபருடன் கேக் வெட்டி உற்சாகத்துடன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.


கண்கலங்கிய அமைச்சர்
இதையடுத்து பிறந்தநாளில் கடந்த காலத்தை குறித்து அவரது தாயார் நூர்ஜகான் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் ஆர். காந்தி இரு கைகளையும் கூப்பி கண் கலங்கியவரே சிறிது நேரம் நின்று விட்டு ஜாஃபரை பார்த்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved