மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுகளை தூர்வாறும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரையிலான வழித்தடத்தில் இயக்க 9 விடியல் பயண பேருந்துகளை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சம்பா பயிர் நடவின் போது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும் என தெரிவித்தார்.