சென்னை வண்ணாபேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற ரயில் சிக்னல் கோளாறு காரணமாக வண்ணாரப்பேட்டையில் நிறுத்தப்பட்டது. இதனால், 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில், 18 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின் ரயில் சேவை சீரானது..