வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி புதுச்சேரியில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதால் கருணை அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை பறிக்கப்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் கொடுத்து, மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? என கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்து பதிலளிக்க புதுவை அரசுக்கு உத்தரவிட்டார்.