ஜல்லிக்கட்டு போட்டி : நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை மாநிலங்களவை உறுப்பினரும் , நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் துவக்கி வைத்து அரசின் ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு பங்கேற்க உறுதி மொழியை வாசித்தார் . தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியினை கண்டுகளித்த மாநிலங்கள் உறுப்பினர் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தப் போட்டியில் 700 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர் பாலச்சந்திரன், மாநில அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல் இராமசுவாமி, முன்னிலை வகிக்க அரசு துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிகட்டு வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். Related Link ஈரப் பதத்தால் நெல்மணிகளை கொள்முதல் செய்ய மறுப்பு