திருச்செந்துர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா ஜெயந்திநாதர் சப்பரத்தை கோவில் அர்ச்சர்கள் பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து தூக்கி சென்ற அவலம் அரங்கேறி உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சன்னதி தெரு வழியாக ஓடும் பாதாள சாக்கடை நீர்திருவிழா நாளில் காலையில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்ரத்தில் ஒன்பது சந்தியை மாலையில் வெள்ளி சப்பரத்தில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் இன்று காலையில் சுவாமி தேவிநாதர் தங்க சப்பரத்தில் சன்னதி தெரு வழியாக வந்தார். கோயில் அர்ச்சர்கள் சுவாமி சப்பரத்தை சுமந்து சென்றனர். அப்போது பாதாள சாக்கடை கழிவுநீர் சன்னதி தெரு வழியாக சென்றது. இதனால் துர்நாற்றம் வீசியது. கழிவுநீரை கடந்து சென்ற சுவாமி சப்பரம்மேலும் சுவாமி சப்பரத்தை சாக்கடை கழிவு நீரில் நடந்தது கொண்டே சுமந்து செல்லும் அவலம் அரங்கேறியது. கோயிலுக்கு செல்லக்கூடிய பிரதான வழியில் பாதாள சாக்கடை கழிவு நீர் அடிக்கடி நிரம்பி வெளியேறுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து கழிவுநீரில் நடந்த படியே செல்லும் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link ஈஸ்வர கால பூதத்தான் சிவ சுடலைமாடன் கோயில்