சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.