இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 2 கோல்களும், பஞ்சாப் அணி ஒரு கோலும் அடித்தது. இதனால் சென்னை அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.