Also Watch
Read this
Posted on: May 20, 2025 06:35 AM
By: Srini Vasan

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் ஆறு போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையம், மழை வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.
இதனால் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved