கடலூர் மாவட்டம் ஆல்பேட்டையில் வாகன தணிக்கையின் போது தனியார் பேருந்தில் 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது. சென்னையிலிருந்து மன்னார்குடி சென்ற தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்ததில் நவீத் அன்வர் என்பவரிடமிருந்து 40 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.