அரசு மணல் குவாரிகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். துறையூரில் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்துடன் மற்றும் துறையூர் தொகுதி டிப்பர் லாரி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வ ராஜாமணி, குவாரிகள் திறக்காத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சங்கங்கள் இணைந்து பெரிய அளவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.