பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு FIR போடப்பட்டால், உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். மதுரையில், செய்தியாளர்களிடம் பேசியவர், டங்க்ஸ்டன் விவகாரத்தில் டெண்டர் அறிவிக்கும்போது வேடிக்கை பார்த்துவிட்டு கடைசி நேரத்தில் தமிழக அரசு எதிர்ப்பது புரியாத புதிராக உள்ளதாக கூறினார்.