Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பயணிகளுக்கு சிரமம்
ராமநாதபுரம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள் கடை வைத்திருப்போர் நடைமேடை முழுவதையும் ஆக்கிரமித்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி
இது குறித்து நியூஸ் தமிழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு இருக்கைகள்
அமைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved