Also Watch
Read this
By: Web Team

சேலம் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்து ஓடுவதால், ஆற்றில் இறங்கவோ? குளிக்கவோ மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 88 ஆயிரம் கன அடியில் இருந்து 98 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved