Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகள் போராட்டம் :
நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் சரவணன் அலுவலர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இளம் விவசாயிகள் சங்கம் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு திடீர் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
நான்கு மாதமாக ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை நடவடிக்கை எடுக்கும் வரை இடத்திலிருந்து செல்வதாக இல்லை என்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஆரியூர் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அருகில் உள்ள பெரமண்டாம் பாளையம் சர்வே எண் கொண்ட விவசாய நிலத்தில் நிலத்தின் உரிமையாளர் நல்லசாமி என்பவர் அரசு உரிமைகளை மீறி கோழிப்பண்ணை அமைப்பதற்கு கட்டுமான பணிகளும் மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டி பேசினார்.
தொடர்ந்து கோழிப்பண்ணை அமைக்க அமைக்கப்படும் இடத்தில் இருந்து 200 மீட்டருக்கு குடியிருப்பு பகுதியில் 75 மீட்டருக்கு உள்ள கிணறும் உள்ளது என்றும் குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைந்தால் கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கழிவுநீர் குடிநீரையும் விவசாய நிலத்தின் பாதிக்கும் அது மட்டும் இல்லாமல் நோய் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோழிப்பண்ணை விவரமாக பிரச்சனை தீர்வு கிடைக்கும் வரை இடத்திலிருந்து எழுந்து செல்வதில்லை என்று கூறியதால் நல்லிபாளையம் காவல் துறையினர் மற்றும் அதி விரைவு
படை குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved