திருவள்ளூர் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட்புஷ்பா தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர், உணவு தரமாக வழங்கப்படுகிறதா, கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக உள்ளதா என்பது குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தனர்.