நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள நகராட்சி பொதுக் கழிப்பிடத்தை பாலாஜி என்பவர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர்.