Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 12:52 PM
By: Web Team

புதுச்சேரியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே தேர்தல் ஆணையத்திற்கு மாலை அணிவித்து, பாடை கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சென்ற இளைஞர் காங்கிரசாரை, தடுத்து நிறுத்திய போலீசார் பாடையை அகற்ற முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரசாரை, போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved