செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகேவுள்ள கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமானது. முகுந்தகிரி, இந்தளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமான நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரசு அதிகாரிகள் குடோனுக்கு எடுத்து செல்லாததே காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.